ரூ. 100 கோடி வசூலை குவித்த “அரண்மனை 4”; மகிழ்ச்சியில் சுந்தர் சி!

 ரூ. 100 கோடி வசூலை குவித்த “அரண்மனை 4”; மகிழ்ச்சியில் சுந்தர் சி!

இயக்குன சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “அரண்மனை 4”.

அரண்மனை 3 படமானது தோல்வியை தழுவியிருந்த நிலையில், அரண்மனை 4 படத்திற்கான மெனக்கெடலை அதிகமாகவே கொடுத்திருந்தார் இயக்குனர் சுந்தர் சி.

குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் திரைக்கதையையும் செய்திருந்தார் இயக்குனர். இதன் பலன் காரணமாக குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர் இன்னமும்.

இதன் காரணமாக படம் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் வசூலை குவித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

 

Related post