முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜின் “பைசன்” டீம்!

 முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜின் “பைசன்” டீம்!

பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்.

இவர் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தினை இயக்கி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு.

படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பில் இளம் கதாபாத்திரத்தில் தோன்றிய துருவ், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சுமார் 80 கிலோ வரை எடையை ஏற்றி தோன்றவிருக்கிறாராம். அதற்காக சில நாட்கள் எடுத்துக் கொண்டு உடலை ஏற்றவிருக்கிறார் துருவ் விக்ரம்.

Related post