சூர்யா கதையில் சிவகார்த்திகேயன்
![சூர்யா கதையில் சிவகார்த்திகேயன்](https://www.fulloncinema.in/wp-content/uploads/2024/07/106979357-850x560.webp)
அடுத்தடுத்து படங்கள் அறிவிப்பு வெளியாவதும் நடிகர் சூர்யா அதிலிருந்து வெளியேறுவதும் என சில காலமாக நடந்து வருகிறது.
அந்த வரிசையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது “புறநானூறு” என்ற திரைப்படம்.
சில தவிர்க்கமுடியாத காரணத்தால் இப்படம் தற்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சூர்யா நடிக்க தவறிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
இப்படம், சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகும் எனவும் கூறுகிறார்கள். இயக்குனர் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனிடம் கதையை கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
விரைவில் இதுகுறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.