கங்குவா பார்த்து மெய் சிலிர்த்தேன் – கவிஞர் விவேகா

 கங்குவா பார்த்து மெய் சிலிர்த்தேன் – கவிஞர் விவேகா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பல கோடி செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

படத்தினை எதிர்பார்த்து சில வருடங்களாகவே சூர்யாவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என சில தினங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், படத்தினை பார்த்த படத்தின் பாடலாசிரியரும் கவிஞருமான விவேகா தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா படம் பார்த்து மெய் சிலிர்த்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறியிருப்பதாவது, “

‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்…
Feeling very proud to be a part of this great film!”

என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.

Related post